பெங்களூரில் அதிமுக பொருளாளர் வீடு மீது கல்வீசி தாக்குதல்

Sekar Tamil
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் அதிமுக பொருளாளர் ராஜேந்திரனின் வீடு, வணிக வளாகம் மற்றும் நிறுவனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வன்முறை வெடித்து தமிழர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், பெங்களூரு குமாரசுவாமி லே அவுட் பகுதியில் உள்ள கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரனின் வீடு, வணிக வளாகம், நிறுவனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


தொடர்ந்து அவரின் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.



Find Out More:

Related Articles: