வன்முறை... வன்முறை... காஷ்மீரின் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு

Sekar Tamil
புதுடில்லி:
வன்முறையால் பாதித்த ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆய்வு செய்தார்.


காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 2 மாதத்திற்கு மேலாக பதற்றம் நிலவி வந்தது. தொடர்ந்து ஒரு சில இடங்களில் மட்டும் அமைதி திரும்பி உள்ளது. 


இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் காஷ்மீர் சென்று பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வந்தனர். தொடர்ந்து நேற்று ராணுவ தளபதி தல்பீர் சிங் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.


அவரிடம்க ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விவரித்தனர். 


Find Out More:

Related Articles: