கேஸ் சிலிண்டரில் சாராயம் கடத்தல்... போலீசார் அதிர்ச்சி...

Sekar Tamil
பீகார்:
வித்தியாச வித்தியாசமாக யோசிக்கிறாங்களே... ரூம் போட்டு இதற்காக மூளையை கசக்கி பிழிவார்களோ... என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.


மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கேஸ் சிலிண்டரில் சாராயம் கடத்தி வந்த கில்லாடிகளை கண்டு போலீசார் விக்கித்து போய் உள்ளனர். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...


பீகார் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இதனால் குடி மன்னர்கள் பிற மாநில எல்லைக்கு ஓட்டம் பிடிக்கின்றனர். சமீபத்தில் இப்படிதான் பக்கத்து நாடான நேபாளத்திற்கே சென்று குடித்துவிட்டு வந்த 70 பேர் போலீசாரிடம் சிக்கினர்.


இந்நிலையில் பீகாரில் பல இடங்களில் சாராயத்தின் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. எப்படி இது உள்ளே வருகிறது என்று போலீசாரும் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர். பல நாட்களாக நடந்த இந்த கடத்தல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


எப்படி சாராயத்தை கடத்தி வந்துள்ளனர் தெரியுங்களா? சிலர் கேஸ் சிலிண்டரில் சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதை கண்டுபிடித்த போலீசார் ஜார்கண்ட் - பீகார் எல்லைப்பகுதியில் சிலிண்டரில் கடத்தி கொண்டு வரப்பட்ட 149 சாராய பாக்கெட்களை கைப்பற்றினர். இதில் ஈடுபட்ட 2 பேரும் சிக்கி உள்ளனர்.


Find Out More:

Related Articles: