நாய் குட்டி போல் மேலே விழுந்து பாசம் காட்டும் யானைக்குட்டி!

Sekar Tamil
தாய்லாந்து:
இப்பவே முடியாது... வளர்ந்துட்டா... என்ன விஷயம்ன்னா... யானைக்குட்டி ஒன்று நாய்குட்டியை போல் மனிதர்களிடம் பாசமாக அவர்கள் மீது ஏறி விளையாடுகிறது. இப்பவே செம வெயிட்டு... வளர்ந்துட்டா...


 இதுபோல் எங்கு நடக்குது தெரியுங்களா? மேற்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகளும் அதன் குட்டிகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. 


 இந்த சரணாலயத்தில்தான் இதுபோன்ற பாசம் வெளிப்பட்டுள்ளது. இங்குள்ள 2 மாத யானைகுட்டி ஒன்று அங்கு சென்ற சுற்றுலா பயணிகளிடம் மிகவும் பாசத்துடன் விளையாடுகிறது. அதுவும் எப்படி? 


வீட்டில் வளர்க்கும் நாய்குட்டிகள் எப்படி பாசத்தோடு இருக்குமோ... அதுபோல் இந்த யானைக்குட்டியும் அனைவரிடமும் பாசமாக அவர்கள் மீது ஏறி விளையாடுகிறது.


இப்ப இருக்கிற வெயிட்டே தாங்க முடியலை... பாசத்தோடு இது வளர வளர மேல வந்து ஏறினா... ஜஸ்ட் ஜோக்தான் பாஸ்.. பாசத்துக்கு முன்னாடி இதெல்லாம் தூசிங்க...


Find Out More:

Related Articles: