கிளர்ச்சிப்படை ஆக்கிரமிப்பு பகுதியில் வான்வெளி தாக்குதல்...

Sekar Tamil
டமாஸ்கஸ்:
கிளர்ச்சிப்படை ஆக்கிரமிப்பு பகுதிகளில் சிரியா ராணுவம் நடத்திய அதிரடி விமான தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.


சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அலெப்போ நகரின் பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 


கிளர்ச்சியாளர்கள் அதிகமிருக்கும் ஹமா மாகாணப் பகுதிகளைக் குறிவைத்து சிரியா ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் சிரியா ராணுவம் கிளர்ச்சிப்படை ஆக்கிரமிப்பு பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தியது.


இதில் வடக்கு சிரியாவை இட்லிப் மாகாணத்தை சேர்ந்த 17 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.



Find Out More:

Related Articles: