ஓலா டிரைவர்களின் ஓநாய் தனம்... சிறுமி பலாத்காரம்... கொலை...

Sekar Tamil
கொல்கத்தா:
என்ன கொடூர குணம் கொண்டவர்கள்... இதயத்தை கழற்றி வைத்த மிருகங்கள் என்றுதான் இவர்களை சொல்ல வேண்டியுள்ளது.


விஷயம் என்னவென்றால்... கொல்கத்தாவில் 2 ஓலா கார் டிரைவர்கள், 12 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம்தான் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈவிரக்கமற்ற அந்த கொடூரர்களை என்ன செய்வது?


 மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் உள்ள புராபஜார் பகுதியில் தெருவேரவாசிகள் அதிகளவில் உள்ளனர். அதில் ஒரு 12 வயது சிறுமியை நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஓலா கார் டிரைவர்கள் காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த மிருகங்கள் இரண்டும் சேர்ந்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலையும் செய்துள்ளன.   


 இது ஓடும் காரிலேயே நடந்துள்ளதுதான் கொடூரத்திலும் கொடூரம்.


இந்நிலையில் சிறுமியை காணாமல் தாய் போலீசில் புகார் கொடுக்க... தீவிர விசாரணையில் சிக்கினர் இந்த 2 மிருகங்களும்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை கால்வாயில் கொலை செய்தாதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Find Out More:

Related Articles: