நடுவானில்... அழகான பெண் குழந்தை... பறந்த விமானத்தில் பிறந்தது

Sekar Tamil
துபாய்:
ஆம்புலன்ஸ்சில் குழந்தை பிறந்து கேள்விப்பட்டு இருப்போம்... ஆனால் விமானத்தில்... இப்போது அதுவும் நடந்துள்ளதாம்...


எங்கு தெரியுங்களா? துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில்தான் கர்ப்பிணி பெண்ணிற்கு நடுவானில் குழந்தை பிறந்துள்ளது.


துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் நோக்கி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்திய வான்பகுதியை நெருங்கியபோது விமானத்தில் பயணம் செய்த பிலிப்பைன்ஸ் நாட்டின் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.


உடன் விமானத்திலேயே 2 செவிலியர்கள் மற்றும் மற்றும் சக பயணிகள் உதவியுடன் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் விமானம் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 


இதனால் 9 மணி நேரம் தாமதமாகியும் மற்ற எந்த பயணியும் எந்த புகாரும் செய்யவில்லை. இதை மகிழ்ச்சியுடன் அந்த விமானத்தில் பயணம் செய்த மிஸ்ஸி பெர்பரே என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்து பதிவிட்டுள்ளார்.


Find Out More:

Related Articles: