லாரி மோதியது... மாட்டு வண்டி ஓட்டி வந்த 2 பேர் பலி...

Sekar Tamil
கரூர்:
மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் மீது லாரி மோதியதில் 2 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கரூர்  அடுத்த சுக்காலியூர் தேசிய நெடுஞ்சாலையில் கொடையூரை சேர்ந்த அருள், தூளிநாயக்கனூரை சேர்ந்த சிறுவன் பூபதி ஆகியோர்  மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தனர்.


அப்போது பின்னால் வந்த கிரைனைட் கல் ஏற்றி வந்த லாரி வேகமாக மாட்டு வண்டிகள் மீது மோதியது. இதில் அருள், பூபதி இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 மாடுகளும் பலியானது.


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Find Out More:

Related Articles: