மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரர் வீரமரணம்...

Sekar Tamil
பாட்னா:
வீரமரணம் அடைந்த சிறப்பு படை வீரருக்கு அனைவரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர். அந்த சோகத்தின் செய்தி இதுதான்...


பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் நக்சல் ஒழிப்பு சிறப்புப் படையை சேர்ந்த வீரர் வீரமரணம் அடைந்தார்.


பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள கோகர்கட்டி கஹாரி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்க... அங்கு விரைந்தனர் நக்சல் ஒழிப்பு சிறப்புப் படையினர்.


உள்ளூர் போலீசாரும் இவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியபோது மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிறப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். தொடர்ந்து சிறப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.


இதில் சிறப்பு படையை சேர்ந்த அஜய் மண்டல் என்பவர் வீரமரணம் அடைந்தார். பலியான அஜய் பாகல்பூர் மாவட்டம், நவாடா கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.


வீரமரணம் அடைந்த இவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



Find Out More:

Related Articles: