எம்பியா... தீவிரவாதியா... குண்டு வைப்பேன் என்று சர்ச்சை பேச்சு

Sekar Tamil
இலங்கை:
குண்டு வைத்து தகர்ப்பேன் என்று தீவிரவாதிபோல் பேசிய இலங்கை எம்பியின் சர்ச்சை பேச்சு பெரும் கண்டத்திற்கு உள்ளாகி வருகிறது. விஷயம் என்னன்னா?


ராமேஸ்வரம், தலைமன்னார் பகுதிகளை இணைக்கும் விதமாக பாலம் ஒன்று அமைக்கப்படும் என இலங்கை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு எம்.பி. ஒருவர் அதனை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


லஹெச உறுய கட்சி தலைவரும் எம்.பியுமான உதய கம்மன்பில என்பவர்தான் இப்படி சர்ச்சையை எழுப்பி உள்ளார். இவர் நிருபர்களிடம் கூறும்போது அமைச்சர் கபீர் காசிம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் கட்டப்போவதாக அறிவித்துள்ளார்.


 இந்த பாலத்தின் மூலம் இந்தியாவையும், இலங்கையையும் இணைப்பதாக கூறினாலும், அது இலங்கையை தமிழ்நாடாக மாற்றிவிடும். இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்கள் இலங்கைக்கு வருவார்கள்.


இதனால் சிங்களருக்கு என்று இருக்கும் ஒரே நாடும் இல்லாமல் போய்விடும். எனவே பாலம் அமைக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும், இல்லையென்றால் தேசிய பாதுகாப்பு கருதி அந்த பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என அவர் தான் ஒரு எம்பி என்பதை மறந்தது போல் பேசியது பெரும் சர்ச்சையையும், கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது.


Find Out More:

Related Articles: