விழாதே... விழாதே காலில் விழாதே... முதல்வர் கண்டிப்பு

Sekar Tamil
புதுச்சேரி:
விழாதே... விழாதே காலில் விழாதே என்று புதுச்சேரி முதல்வர் கண்டிப்பு காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதாங்க அந்த விஷயம்.
புதுவை சுகாதார இயக்ககத்தில் 130 புதிய ஊழியர்களுக்கு புதிதாக  நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் பள்ளி கல்வித்துறையில் 41 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கு பணி ஆணை வழங்கும் போதுதான் இப்படி ஒரு கண்டிப்பை முதல்வர் நாராயணசாமி காட்டியுள்ளார். பணிஆணை வாங்க வந்த ஒவ்வொரு ஊழியரும் பழக்கூடை, சால்வை, இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர்.


நாராயணசாமி ஆணை வழங்கியதும் அவருக்கு சால்வை அணிவித்து அவற்றை கொடுத்தனர். ஆனால் நாராயணசாமி இதை ஏற்க மறுத்துவிட்டார். அவர்களிடமிருந்து ஒரே ஒரு சால்வை மட்டும் பெற்றுக்கொண்டார். 


சில ஊழியர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற முயற்சிக்க அப்போதான் அவர் இப்படி கண்டிப்பு காட்டினார். எப்படி? யாரும், எனது காலில் விழக்கூடாது, இதுபோன்ற கலாச்சாரங்கள் தேவையில்லை என்று. 


நம்புங்க... அரசியல்வாதிகள் திருந்திட்டாங்க போலிருக்கு!


Find Out More:

Related Articles: