அதிமுகவில் ஐக்கியமான மாஜி திமுக எம்எல்ஏ

Sekar Chandra
சென்னை:
திமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி அதிமுகவில் முதல்வர் ஜெயலலலிதா முன்னிலையில் ஐக்கியமானார். 


முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன்,  தமாகாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வேலூர் ஞானசேகரன் ஆகியோர் அ.தி.மு.கவில் இணைந்தனர்.


இதேபோல் தமாகாவை சேர்ந்த வேலூர் மாநகராட்சி 34-வது வார்டு உறுப்பினர் சீனிவாசகாந்தி, தென் சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் இ.சி சேகர் உட்பட வேலூர், சென்னை, திருவள்ளூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 70 பேரும் அதிமுகவில் இணைந்தனர். 



Find Out More:

Related Articles: