படகு பழுது... நடுக்கடலில் தத்தளிக்கும் 4 மீனவர்கள்...

Sekar Chandra
புதுக்கோட்டை :
மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் படகில் ஏற்பட்ட பழுதால் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர். இவர்களை மீட்க கடலோர காவல்படையினர் விரைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


புதுக்கோட்டை அய்யம்பட்டினத்திலிருந்து நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுகடலில் தத்தளித்து வருகின்றனர்.
அய்யம்பட்டினத்திலிருந்து 17 நாட்டுக்கல் மைல் தூரத்தில் நாட்டு படகில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதனால் கரைக்கு திரும்ப வழியின்றி அந்த மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். இவர்களை மீட்க கடலோர காவல்படையினர் விரைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 



Find Out More:

Related Articles: