ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள்.... சுட்டுக் கொன்ற இந்திய வீரர்கள்

Sekar Chandra
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாக். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனை முறை வாலை நறுக்கினாலும் பாக்... இன்னும் தன் குள்ளநரித்தனத்தை கைவிடமாட்டேன் என்பதுதான் வேதனை. 


இந்திய- பாக்., எல்லையில் பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகளின் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுள்ளது. ஷாபூர் என்ற இடத்தில் ஊடுருவ முயன்ற இந்த 3 தீவிரவாதிகளை கண்டுகொண்ட எல்லைபாதுகாப்பு படை அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினர். 


காஷ்மீர் மாநிலத்தில் கலவரம் காரணமாக பதற்றம் நீடித்து வரும் நிலையில்இ ந்தியாவுக்குள் ஊடுருவி மேலும் பதட்டத்தை உருவாக்க பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்தான் எல்லையில் ஊடுருவல் நடந்துள்ளது. இதை நம் வீரர்கள் முறியடித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: