குறைகளை 10 நாட்களுக்கு முடியுங்கள்.. அதிகாரிகளிடம் கெடுபிடி காட்டிய பிரதமர்

Sekar Chandra
புதுடில்லி:
கெடு... கெடு... 10 நாட்களே கெடு... என்று பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எதற்காக தெரியுங்களா?


மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில் டிக்கெட், ஓட்டல் அறை முன்பதிவு செய்தல் போன்ற ஆன்லைன் வர்த்தகங்கள் தொடர்பாக அதிகமாக புகார்கள் வருவது குறித்து அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளார் பிரதமர். இது தனக்கு கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்த அவர், இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதற்கு அப்புறம்தான் இருக்கு விஷயமே... குறைகள் மீது 10 நாட்களுக்குள் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடுபிடியும் காட்ட அதிகாரிகள் அதிர்ந்துதான் போய் உள்ளனர். இதனால் இனிமே குறைகள் குறித்த மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிகிறது. நல்லது நடந்தால் சரிதான். ஆரம்பத்தில் சுறுசுறுப்பு காட்டிவிட்டு பின்னர் வழக்கம் போல் நடக்காமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் பொதுமக்கள்.


Find Out More:

Related Articles: