எப்படி என் ராஜதந்திரம்... திமுக ஆட்சிக்கு வராததற்கு நானே காரணம்... வைகோ சொல்றார்

Sekar Chandra
திருச்சி:
எப்படி என் ராஜதந்திரம்... எப்படி என் ராஜ தந்திரம் என்று கொக்கரித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. எங்கு? எதற்கு தெரியுமா?


திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தான் மேற்சொன்னதை சொல்லியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.


கூட்டத்தில் அவர் பேசியது: “உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பணத்திற்கு அடிபணிய மாட்டார்கள். சேவை செய்பவர்களை தான் மக்கள் ஆதரிப்பார்கள். என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார்.


ஆனால், இந்த தேர்தலில் எனது ராஜதந்திரத்தால்தான் ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது. (ஆமாங்க... உண்மையிலேயே நீங்க ராஜதந்திரிதான் என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்.)


நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்க இருக்கீங்க... உங்களுக்காக நான் இருக்கிறேன். (இப்போ வரைக்கும் அதுதானே தலைவரே நடந்துக்கிட்டு இருக்கு... நமக்கு பதவிதானே இல்ல... என்று தெராண்டர்கள் முணுமுணுப்பு). இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை கைவிடமாட்டேன்”. இப்படி பேசி முஷ்டி உயர்த்தியுள்ளார் வைகோ.


Find Out More:

Related Articles: