சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு

SIBY HERALD
கனா சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்த இரண்டாம் தயாரிப்பு  நெஞ்சமுண்டு நேர்மையுண்டு  படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது.  விழாவில் தனது மூன்றாவது தயாரிப்பு  படத்தை சிவகார்த்திகேயன்,  அருவி இயக்குனர் அருண்பிரபு இயக்குவார் என்று கூறினார்.



இந்நிலையில் சிவகார்த்திகேயனும் அருண்பிரபுவும் இணையும்  படத்தின்  கலைஞர்கள் குறித்த தகவல்  வெளிவந்துள்ளது.  படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார், ஷெல்லி ஒளிப்பதிவும், ரெய்மண்ட் கிராஸ்டா படத்தொகுப்பும் செய்யவுள்ளனர்.



இவர்கள்  அருண்பிரபுவின் அருவி படத்தில் பணிபுரிந்தவர்கள். மேலும்  ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயனும், வசனகர்த்தாவாக குட்டிரேவதி  பணிபுரியவுள்ளனர்.இந்த பட பணிகள்  தொடங்கி  விரைவில் படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: