மீண்டும் மணிரத்னத்துடன் விக்ரம்?

SIBY HERALD
நடிகர் சீயான் விக்ரம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முறையாக இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து ராவணன் படத்தில் நடித்தார்.  தமிழ் வெர்ஷனில் மட்டுமல்லாது ஹிந்தியில் தமிழில் பிரித்விராஜ் செய்த வேடத்தை அவர் செய்தார்.



இந்நிலையில் காற்று வெளியிட படத்தின் படு தோல்வியை அடுத்ததாக ஒரு வருடம் கழித்து மணிரத்னம் டைரக்ட் செய்த படமான மல்டிஸ்டாரர் படம் செக்க சிவந்த வானம் ஒரு சூப்பர் ஹிட் ஆனது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்த இந்த படம் தொண்ணூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மணிரத்னத்துக்கு ஒரு சூப்பர் கம்பேக் படமாக அமைந்தது.



இதனை தொடர்ந்து மணிரத்னம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்க இருந்த அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க உள்ளதாகவும் இதில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. 


Find Out More:

Related Articles: