அடுத்த படத்தை துவங்கிய ஜோதிகா!

SIBY HERALD
நடிகை ஜோதிகா இந்த ஆண்டு தொட்டதெல்லாம் ஹிட் தான். முதலில் அவர் நடித்து இந்த ஆண்டு வெளியான படம் நாச்சியார். பாலா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவர் ஒரு கடுமையான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.



அதனை தொடர்ந்து அடுத்ததாக அவர் மணிரத்னம் இயக்கத்தில் மல்டிஸ்டாரர் படமான செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் அரவிந்த் ஸ்வாமி ஜோடியாக நடித்திருந்தார்.



இந்த படமும் நல்ல வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவதாக இவரது நடிப்பில் ஹிந்தி படமான துமாரி சுலு படத்தின் ரீமேக்கான காற்றின் மொழி படம் இந்த வாரம் நவம்பர் பதினாறாம் தேதி திரைக்க்கு வர உள்ளது. இந்நிலைல்யில் அடுத்ததாக தனது அடுத்த படத்தின் பூஜையையும் இன்று போட்டு விட்டார் ஜோதிகா. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜ் இயக்க ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 


Find Out More:

Related Articles: