இப்படியா செய்வது... கவலையில் மூழ்கிய மலையாள படஉலகம்

Sekar Tamil
கேரளா: 
அவங்க... அவங்க வேலையை பார்க்கும்போது ஏன் இப்படி கதற விடுறீங்கப்பா... என்று மலையாள பட உலகம் அதிர்ச்சி அடைந்து போய் உள்ளது. காரணம் இதுதான்.


மலையாள சினிமாவின் பிரபல நடிகை காவ்யா மாதவன். இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார், நல்ல திறமையான நடிகையான இவர் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் சில நாட்களாக ஆபாச கருத்துக்களாக பதிவேற்றி வந்தார் என்ற குற்றச்சாட்டு இவரை சுற்றி உலா வந்தது. இதனால் இவரை திட்டியவர்கள் ஏராளம். எதையும் விசாரிக்காமல் புறம் பேசுவதுதான் வழக்கான ஒன்றாகி விட்டதே...


இப்போ... அந்த ஆபாச கருத்துக்கள் அனைத்தும் ஏதோ கேடுக்கெட்ட நபர் ஒருவர் பேக் ஐடி மூலம் இதை செய்து வருகிறார் தெரியவர, காவ்யாமாதவனும் உடனே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இப்படி பேக் ஐடி மூலம் ஆபாச கருத்துக்கள் பரப்பிய இளைஞருக்கு போலீசார் காப்பு மாட்டியதாக சொல்றாங்க...



Find Out More:

Related Articles: