ஜெய் பற்றி பேசிய அஞ்சலி!

SIBY HERALD
நடிகை அஞ்சலி பேரன்பு படத்தில் அவரது நடிப்புக்காக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெய்யுடன் பிரேக்கப் ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு, நான் எப்பொழுதுமே அவருடன் இருந்ததாக கூறியதே இல்லையே, மீடியாக்கள் அவர்களாக எதோ கேட்டு அவர்களே ஏதோ போட்டு பரப்பி இப்பொழுது அவர்களே நிறுத்தியும் விட்டனர்.



ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் வந்த போது அழுது ஆர்ப்பாட்டம் செய்து, போற வர்ற எல்லோரிடமும் கூறி வருத்தப்படுவேன், ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பழகி விட்டது. உண்மையாக இல்லாத ஒரு விஷயத்துக்கு எதுக்கு ரியாக்ட் பண்ண வேண்டும் என்று விட்டு விட்டேன் என்றார் அஞ்சலி.



அடுத்ததாக அஞ்சலி நாடோடிகள் 2 ,லிசா மற்றும் சிந்துபாத் என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.


Find Out More:

Related Articles: