தோல்வியை ஒத்துக்கொண்ட தேவரகொண்டா!

SIBY HERALD
நடிகர் விஜய் தேவரகொண்டா பெல்லி சூப்புழு மற்றும் அர்ஜுன் ரெட்டி என இரண்டே படங்களின் மூலமாக பிரம்மாண்டமாக வளர்ந்தவர். மேலும் இவரது இந்த ஆண்டின் முதல் படமான கீதா கோவிந்தம் படமும் மாபெரும்வெற்றியை பெற்றது. இந்த படம் நூற்றி இருபத்தி ஐந்து கொடிகள் வசூல் செய்து இந்த ஆண்டின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் ஆனது.



இந்நிலையில் அவரது அடுத்த படமான நோட்டா தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. விஜய் சேதுபதியின் தூநூற்றி ஆறு மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் என இரண்டு படங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு நோட்டா காணாமலே போனது.



படமும் ஒழுங்காக எடுக்கப்படாததால் ஆனந்தி ஷங்கரின் இயக்கத்தில் வெளியான நோட்டா தோல்வி அடைந்தது. இன்று விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் தோவிக்கான முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் தோவலியில் இருந்து பாடம் படித்து கொள்வதாகவும் கூறி தனது தோல்வியை பார்த்து சந்தோஷமாக இருப்பவர்கள் இப்பொழுதே கொண்டாடி கொள்ளுங்கள் நான் விரைவில் திரும்ப வருவேன் என்று உற்சாகமாக கூறியுள்ளார் ரவுடி பாய் விஜய் தேவரகொண்டா. 


Find Out More:

Related Articles: