இரட்டை போட்டியை சமாளிப்பாரா ஜோதிகா

SIBY HERALD
நடிகை ஜோதிகா இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்தார். இந்த படத்தில் கரடுமுரடான காவல் துறை அதிகாரியாக நடித்தவர் அடுத்ததாக மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகா அரவிந்த் சாமியின் ஜோடியாக சீற்றா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் ஜோதிகாவின் மூன்றாவது படமாக ஆக்டொபர் பதினெட்டாம் தேதி காற்றின் மொழி படமும் வெளியாக உள்ளது. ராதா மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா ஒரு மிடில் க்ளாஸ் பெண்ணாகவும் ரேடியோ ஜாக்கியாகவும் நடித்து கலக்க உள்ளார். ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த துமாரி சுலு படத்தின் ரீமேக்கான இந்த படம் பெரும் பொத்தியை சந்திக்க உள்ளது.



விஷாலின் சண்டக்கோழி டூ படமும் ஆக்டொபர் பதினெட்டாம் தேதி வர உள்ளது. அதே போல தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியின் படமான வட சென்னை படமும் ஆக்டொபர் பதினேழாம் தேதி வெளியாக உள்ளது. இதனால் காற்றின் மொழி படத்துக்கு இரண்டு புறங்களில் சோதனை வந்துள்ளது. பார்க்கலாம் இந்த இரண்டு படங்களை மீறி ஜோதிகா ஜெயிப்பாரா என்று. 


Find Out More:

Related Articles: