குத்துச்சண்டை நாயகியின் கடைசி வாய்ப்பு

SIBY HERALD
தொழில்முறை  குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதி சுற்று படத்தின் மூலமாக திரை உலகினுள் நுழைந்தார். இந்த படத்தில் மாதவன் ஜோடியாக நடித்திருந்தனர் அதிலும் குத்துச்சண்டை பயின்று வெல்லும் ஒரு சேரி பெண்ணாக நடித்து கலக்கியிருப்பார். தன்னை விட வயது அதிகமான தனது பாக்சிங் கொச்சையான மாதவனை காதலித்து அவரது பதக்க கனவுகளை நனவாக்கும் சின்ன பெண் மதியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.



இதன் பின்னர் படு கவர்ச்சியான வேடத்தில் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டார். இவரது அதிரடி கவர்ச்சியை யாருமே எதிர்பார்க்கவில்லை என்ற நிலையில் படமும் படு தோல்வி அடைந்தது. தெலுங்கில் குரு என்ற இறுதி சுற்றின் ரீமேக்கில் நடித்தார். அதுவும் ஓடவில்லை.



இந்நிலையில் கடைசி முயற்சியாக இப்பொழுது ஆதி ஜோடியாக நீவேவரோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் ஹிட்டான அதே கண்கள் படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் தாப்ஸியும் நடித்துள்ளதால் ரித்திகாவுக்கு முக்கியத்துவம் இருக்குமா இதுவாவது தன்னை காப்பாற்றுமா என்று எதிர்ப்பது காத்திருக்கிறார் ரித்திகா சிங். 


Find Out More:

Related Articles: