அடுத்ததும் முடித்த சமந்தா!

SIBY HERALD
இந்த ஆண்டின் கலக்கல் கதாநாயகி யார் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் தான் இருக்க முடியும். சந்தேகமே இல்லாமல் அது சமந்தா தான். நாக சைதன்யாவுடன் சென்ற ஆண்டு திருமணம் ஆன பின்பும் கூட வரிசையாக படங்கள் நடித்தபடியும் ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய கதாபாத்திரங்களாகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களுடனும் நடித்து வருகிறார்.



இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மூன்று முத்து முத்தான கதாபாத்திரங்களில் தெலுங்கு தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார். ராமச்சரனுடன் ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண் ராமலட்சுமியாக , விஷாலின் இரும்புத்திரை படத்தில் மனோதத்துவ நிபுணர் ரதிதேவியாக  மற்றும் நடிகையர் திலகம் படத்தில் மதுரவாணி என்ற பத்திரிகையாளராகவும் நடித்து அனைவரையும் ஈர்த்தார்.



இப்பொழுது இந்த படங்களை தொடர்ந்து இவர் நடித்த படமான யூ டர்ன் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது. பவன் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா ரச்சனா என்ற துணிச்சலான பத்திரிகையாளராகவும் ஒரு பாலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் மரணங்களின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்பவராகவும் நடித்துள்ளார். யூ டர்ன் படம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியாக உள்ளது. 


Find Out More:

Related Articles: