விஷால் ஹீரோயினின் மொபைல் பயம்

SIBY HERALD
 நடிகர் விஷால் நடிப்பில், புதுமுக இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ள படம் இரும்புத்திரை. சமந்தா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கும் இப்படம் இந்த வாரம் வெளியாகிறது. இந்நிலையில் இரும்புத்திரை பற்றி பேசிய சமந்தா, இப்படத்தின் இயக்குனர் மித்ரன் இந்த கதையை சொல்லி முடித்த பிறகு மொபைலை கையில் எடுக்கவே பயந்ததாக கூறியுள்ளார். 


நிஜ வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று பதறியதாகவும், நல்லவேளையாக தனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் சமந்தா கூறினார். மே 11 வெளியாகும் இப்படத்தில், சமந்தா ரதிதேவி என்ற மனோதத்துவ நிபுணராக நடிக்கிறார். 


இந்த படத்தில் அர்ஜுன், டேட்டா வைத்து மக்களை துன்புறுத்தி பணம் சம்பாதிக்கும் நூதன திருடனாகவும், விஷால் ஒரு ராணுவ அதிகாரியாகவும் நடித்துள்ளனர். ஏழுமலை பட காலகட்டத்தில் விஷால் அர்ஜுனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அர்ஜுன் நடிக்கும் மிரட்டல் வில்லன் கதாபாத்திரத்தில் விஷாலின் நண்பர் ஆர்யா தான் நடிப்பதாக இருந்து பின்னர் விலகினார். 


Find Out More:

Related Articles: