வாழ்த்துக்கள் ப்ரோ... அனிருத்... நன்றி கூட சொல்லாத தனுஷ்...

Sekar Tamil
சென்னை:
பிளவு... இன்னும் அதிகமானாலும் அதை பற்றி வருத்தப்படாமல் வாழ்த்துச் சொன்னவருக்கு ஒரு நன்றி கூட சொல்லலையே இவர் என்று வேதனைப்படுகிறது கோலிவுட் வட்டாரம்.


என்ன விஷயம் என்றால்... ஒன்றாக பின்னி பிணைந்த நட்பில் நெஞ்சை நக்கிக் கொண்ட தனுஷ், அனிருத் இருவருக்கும் இடையில் என்ன லடாயோ.... இப்போது இந்த கூட்டணிக்கு ஆப்பு விழுந்துவிட்டது. 


முதல்முறையாக தான் இயக்கும் படத்திற்கு வேறு ஒருவரை இசையமைப்பாளர் ஆக்கி உள்ளார் தனுஷ். இவர் நடித்த தொடரி படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு முக்கிய பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து சொல்லியிருந்தனர். இதில் முக்கியமான வாழ்த்து அனிருத் உடையது. தொடரி மூலம் மேலும் ஒரு வெற்றியை அடைய வாழ்த்துக்கள் ப்ரோ என்று தனுஷ் ஐடிக்கு டேக் செய்து அனிருத் வாழ்த்தியுள்ளார்.


தனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு ட்விட்டரில் நன்றி சொன்ன தனுஷ், அனிருத்தை மட்டும் கண்டுக்கொள்ளவே இல்ல... ஏன் ப்ரோ?


Find Out More:

Related Articles: