அறிவிச்சாச்சு....அறிவிச்சாச்சு.....சூர்யாவின் 35-வது திரைப்பட டைட்டில்

Sekar Tamil
'சிங்கம் 3' திரைப்படத்திற்கு பிறகு சூர்யா, 'நானும் ரவுடி தான்' திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவர் நடிக்கவுள்ள 35-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த படத்தை சூர்யாவின், '2டி என்டேர்டைன்மெண்ட்'  நிறுவனமும், 'ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும்' இணைந்து தயாரிக்கவுள்ளது. இதில் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் இசை பணிகளை அனிருத் மேற்கொள்ளவுள்ளார். 


மேலும் இதில் நடிக்கவுள்ள கதாநாயகியை தற்போது படக்குழுவினர் பரிசீலினை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 


'தானா சேர்ந்த கூட்டம்' என்பதை, இந்த படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். 1999-ம் ஆண்டு வெளிவந்த 'படையப்பா' திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிக்கடி இது, 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற டையலாகை கூறுவார். அதே டையலாக்கை தற்போது இந்த படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டனர். 


மேலும் இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles: