நினைத்ததை சாதிச்சிட்டோம்... இயக்குனர் பெருமிதமோ பெருமிதம்

Sekar Tamil
சென்னை:
நினைத்ததை சாதித்து விட்டோம் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் ஒருவர். யார் அவர்?


இவர்தான் அவர்... சென்னை டூ சிங்கப்பூர் படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர்தான். இந்த படத்தின் 6 பாடல்களை 6 நாடுகளில் காரிலேயே சென்று வெளியிட முடிவு செய்தனர். இந்த பயணம்தான் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று சொல்லியிருக்கார். 


இந்த படத்தில் இடம் பெற்ற 6 பாடல்களை 6 நாடுகளில் வெளியிட முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி  இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர் பயணத்தை தொடங்கினர்.


சென்னையில் தொடங்கி பூட்டான், மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா என ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலாக வெளியிட்ட இந்த இந்த குழுவினர் கடைசி பாடலை சிங்கப்பூரில் வெளியிட்டு சாதித்துள்ளனர். 


இதுகுறித்து இயக்குனர் அப்பாஸ் அக்பர் கூறுகையில், “எங்கள் பயணத்தின் போது நாங்கள் பல தடங்கல்களை சந்திக்க நேரிட்டது. ஆனால் எங்கள் குழுவினர் மற்றும் ரசிகர்களின் பேராதரவால் இந்த பயணம் வெற்றிகரமாக மாறி விட்டது என்று சந்தோஷமாக சொல்லியிருக்கிறார். நாமும் வாழ்த்து சொல்வோம்... அந்த குழுவினருக்கு...



Find Out More:

Related Articles: