அடுத்தபடம்... அடுத்தபடம்... இயக்குனர் வெங்கட்பிரபு தகவல்...

Sekar Tamil
சென்னை:
யானைக்கே அடிச்சறுக்கும் போது பூனைக்கு சறுக்கினால் என்னப்பா... இந்த பூனை எழுந்து ஓட ஆரம்பிச்சுடுச்சு இல்ல என்கின்றனர் இவரை பார்த்து.


அவர் யார் தெரியுங்களா... இயக்குனர் வெங்கட் பிரபுதான். தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்தவர். மாஸ் படம் சறுக்கி விட... அந்த தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து தன் பேவரட் கூட்டணியுடன் களம் இறங்கிவிட்டார்.


சென்னை-28 படத்தில் பார்ட்-2 படப்பிடிப்பு கிடுகிடுவென நடந்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெங்கட் பிரபு கலந்துக்கொண்டார். அப்போது இவர், இயக்குனர் ராஜேஸ் கதை, திரைக்கதையில் தான் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளாராம். அப்புறம் என்னங்க... பூனை நடக்க மட்டும் இல்ல ஓடவே ரெடியாகிடுச்சு...


Find Out More:

Related Articles: