இருமுகன் ரிலீஸில் திடீர் மாற்றம்

Sekar Tamil
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'இருமுகன்' திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகுவதாக இருந்தது. 


ஆனால் கடந்த சில நாட்களாக, தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பதட்டமான சூழ்நிலையால், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை பாதிப்படைந்துள்ளது. அதே  போல், கர்நாடகாவில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில், இருமுகன் திரைப்படத்தை, கர்நாடகாவில் வெளியிட்டால், வசூல் ரீதியாக பாதிப்படையும் என்பதற்காக இந்த படத்தை இன்று கர்நாடகா மாநிலத்தில் மட்டும் வெளியிடவில்லை. மற்ற இடங்களில் வழக்கம் போல் இப்படம் இன்று வெளிவந்துள்ளது. 


மேலும் கர்நாடகாவில், 'இருமுகன்' வெளிவரும் நாளை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பதாக  கூறியுள்ளனர். 


Find Out More:

Related Articles: