சாரி... மன்னித்து கொள்ளுங்க... டிடியின் டுவிட்டர் பதிவு...

Sekar Tamil
சென்னை:
சாரிங்க... மன்னித்து கொள்ளுங்க... யார் மனதும் புண்பட்டு இருந்தால் என்று டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார் இந்த பிரபலம்.


யார் அந்த பிரபலம். விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று கொண்டாடப்படும் டி.டி என்கிற திவ்யதர்ஷினிதான் அவர். எதற்காக இந்த மன்னிப்பு என்றால்...


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக திவ்யதர்ஷினி ஒரு நிகழ்ச்சி நடத்தினார். இதில் தொடரி ஸ்பெஷலாக தனுஷ், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டனர். அப்போ... கீர்த்தி சுரேஷ் என்னை ரசிக்க வைத்த கிசுகிசு சதீசுக்கும் எனக்கும் கல்யாணம் என்று வந்த செய்திதான் என்று கூற.... வினை டிடி வாயில் விளையாடியது.


அப்போது அவர் கிசுகிசுவை வரவழைக்க சதீஷிடம் ரூ. 1000 கேட்டதாக சொல்ல... இந்த கமெண்ட் செய்தியாளர்களை கோபத்தில் தள்ளியது. இப்போது என்னடா இது புது வம்பு என்று டிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.


ஏன் ஏதாவது பேசுவானேன்... அப்புறம் மன்னிப்பு என்று சொல்வானேன்...


Find Out More:

Related Articles: