ஆக்சனில் ஜொலிக்க வேண்டும்... அருந்ததிநாயரின் அடங்கா ஆசை

Sekar Tamil
சென்னை:
ஆக்சன்... ஆக்சன் என்று ஆக்சன் நாயகியாக முத்திரை பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் அருந்ததி நாயர்.


‘பொங்கி எழு மனோகரா’ படத்தில் நடித்தவர்தான் அருந்ததி நாயர். தற்போது ‘விருமாண்டியும் சிவனாண்டியும்’ ‘சைத்தான்’ படங்களில் தன் திறமையை காட்டி வருகிறார். வித்தார்த் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.


இவருக்கு ஒரு பெரிய கனவு இருக்காம். என்ன தெரியுங்களா? அனுஷ்கா போன்று அதிரடி வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதானாம். ‘அருந்ததி’, ‘ருத்ரமா தேவி’ படங்களைப் பார்த்து ரொம்ப பிரமித்து போய்விட்டேன்.


என்னை நடிப்பில் மிரட்டிய முதல் நடிகை அனுஷ்காதான். நான் 5 அடி 8 அங்குல உயரம் இருக்கிறேன். வரும் காலத்தில் ‘ஆக்‌ஷன்’ கதைகளில் நடித்து முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்கிறார்.


அய்யா இயக்குனர்களே... அருந்ததிக்கு தகுதியான ஆக்சன் கதை இருந்தால் அவரிடம் சொல்லி படத்தை சீக்கிரமே ஆரம்பிக்கப்பா...



Find Out More:

Related Articles: