அனுஷ்காவோடு மலேசியா போறாராம்....சூர்யா....

Sekar Tamil
'24' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா 'எஸ்-3' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இந்த மாதம் தொடங்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 


ஆனால் தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்தவில்லையாம். சூர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்க உள்ள சில காட்சிகளும், சில சண்டை காட்சிகளும் படம்பிடிக்க உள்ளதால், இதன் படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்திருக்கார்களாம். 
மேலும் இந்த படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குவதாக தகவல்கள் வந்துள்ளன. 


எஸ்-3 திரைப்படத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சூரி, கிருஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.


Find Out More:

Related Articles: