நான் என்ன பிச்சையா எடுக்கிறேன்... ஆவேசம்... ஆவேசம்...

frame நான் என்ன பிச்சையா எடுக்கிறேன்... ஆவேசம்... ஆவேசம்...

Sekar Tamil
சென்னை:
நான் என்ன பிச்சையா எடுத்தேன்... உழைத்துதானே சம்பாதிக்கிறேன் என்று கோபமாக கேட்கிறார் இவர். யார் தெரியுங்களா?


ரேணிகுண்டா படத்தில் அறிமுகமாகி, பின் தென்மேற்கு பருவகாற்று, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் தீப்பெட்டி கணேசன். இவர் ஒரு ஓட்டலில் சர்வராக பணிபுரிவது குறித்து செய்திகள் வந்தன.


பட வாய்ப்புகள் இல்லாததால், வறுமை காரணமாக இவர் சர்வராக பணிபுரிகிறார். இவர் தன்னுடைய மேனேஜரால்  ஏமாற்றப்பட்டதாக குற்றம்சாட்டினார். ஆனால் அவரோ... 'கணேசன் குடித்துவிட்டு ஷூட்டிங் செல்வதால் தான் பட வாய்ப்புகள் வருவதில்லை' என பதிலடி கொடுத்தார்.


இந்நிலையில் இந்த பிரச்னை பற்றி தீப்பெட்டி கணேசன் மீண்டும் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா? "மேனேஜர் என்னை ஏமாற்றியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது'. "நான் என்ன பிச்சை எடுக்கிறேனா? திருடுகிறேனா.. உழைத்துதானே சாப்பிடுகிறேன். இதை யாரும் தவறாக பேச வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More