வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்

Sekar Chandra
நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது 'பாஹுபலி' மற்றும் கமல் ஹாசனின் 'சபாஷ் நாய்டு' ஆகிய இருதிரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், ரஜினியை வைத்து இயக்கும் '2.0' திரைப்படத்தில், அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளிவந்தன. 


தற்போது இதை, ரம்யா கிருஷ்ணன் மறுத்துள்ளார். அவர் 'நான் பாஹுபலி-2 மற்றும் சபாஷ் நாய்டு ஆகிய இருதிரைப்படங்களில் தான் நடித்து வருகிறேன். 2.0 திரைப்படத்தில் நடிப்பது குறித்து, இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. அதனால் இது வதந்தி யாரும் நம்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார்.


'படையப்பா' திரைப்படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன், ரஜினியோடு இணைந்து நடித்திராத நிலையில், 2.0 திரைப்படத்தில் அவர் ரஜினியோடு நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது அது கனவானது.



Find Out More:

Related Articles: