மாணவர்களுக்கு தில்லுக்கு துட்டு படத்தை பிரத்யேகமாக திரையிட்ட நடிகர் ஆனந்த்ராஜ்

Sekar Chandra
சென்னை:
தான் நடித்த தில்லுக்கு துட்டு படத்தை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார் நடிகர் ஆனந்த்ராஜ்.


ஆரம்ப காலத்தில் படு பயங்கர வில்லனாக அவதாரம் எடுத்து தமிழ் சினிமாவில் அதகளம் செய்தவர் ஆனந்த்ராஜ். பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ஒரு சில படங்களில் காமெடியாக நடித்தாலும் முழு நீள காமெடியனாக நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார்.


தற்போது வெளியான தில்லுக்கு துட்டு படத்தில் இவர் நடித்த காமெடி காட்சிகள் குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக இந்த படத்தை இவர் திரையிட்டு காண்பித்துள்ளார்.


சென்னை சிட்டி சென்டரில் அமைந்துள்ள ஐநாக்ஸ் திரையரங்களில் ஆனந்த் ராஜ் பள்ளிக் குழந்தைகளுக்காக பிரத்யேக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்களை மகிழ்வித்துள்ளார்.



Find Out More:

Related Articles: