பிரமாண்டமே பிரமிச்சு போயிடுச்சாம்... கிடுகிடுவென வளரும் 2.0

Sekar Chandra
சென்னை:
கிடுகிடுவென்று வளர்ந்து வருதாம் 2.0 படம். பாலிவுட் ஸ்டார் அக்சய்குமார் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்போ இவரை வைத்து காட்சிகள் படமாக்கிக்கிட்டு வர்றாங்க...


சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வர்றாராம் ஷங்கர். இப்போ ரஜினி, எமி ஜாக்சன் காட்சிகள் இல்லையாம். பாலிவுட் ஸ்டார் அக்சய்குமாரை வைத்து ஷீட்டிங் நடந்துக்கிட்டு இருக்காம். இந்த பிரமாண்ட சயின்ஸ் பிக்சன் படத்தில் அக்சய் குமார் பர்ஸ்ட் பார்ட்டில் சயின்டிஸ்ட் வேடமாம். இரண்டாம் பார்ட்டில் அப்படியே காக்கை உருவம் போல் மனித மிருகமாகவும் மாறி அதகளம் செய்வாராம்.


இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி உட்பட இரண்டு மிகப்பெரிய சண்டைக்காட்சிகளை படம் ஆக்கியுள்ள ஷங்கர் அந்த காட்சிகள் அருமையாக வந்துள்ளதால் செம மகிழ்ச்சியில் இருக்காராம். பிரமாண்டமே பிரமிச்சு போயிடுச்சு... என்று சொல்லுங்க...


Find Out More:

Related Articles: