முடிவு தெரிஞ்ச கதையை மறுபடியும் படிப்பானேன்... சமந்தா ஜாலி

Sekar Chandra
ஐதராபாத்:
முடிவான பிறகு முக்காடு எதற்கு என்று கிசுகிசுக்களை கண்டு அஞ்சாமல் அசராமல் காதலர் நாக சைதன்யாவுடன் செம ஜாலியாக ஊர் சுற்றுகிறார் சமந்தா.


தொடர்ந்து படங்கள் ஹிட் கொடுத்த சமந்தாவிற்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் பற்றிக் கொள்ள... தற்போது அது கல்யாணம் வரை போய் நிற்கிறது. பல்வேறு கிசுகிசுக்கள். இருவரும் சேர்ந்தே வாழ்கின்றனர் என்று கூட செய்திகள் வந்துவிட்டன. ஆனால் ஆழ்கடல் போல் இருதரப்பிலும் பேரமைதி. எதிர்ப்புக்கூட காட்டலைன்னா பார்த்துக்கோங்க...

நாக சைதன்யா


கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 24 படத்தில் நடித்த பிறகு நான் ஒரு நடிகரை காதலிக்கிறேன். அவரை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சமந்தாவே வெடிக்கு திரியை கிள்ளியிருந்தார். இப்போது இரண்டு குடும்பமும் பேசி முடிவெடுத்த நிலையில் இனி என்ன? கெட்டிமேளச் சத்தம்தான். 


இதனால் தங்களைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் இருவரும் அதை சட்டை செய்வதில்லை. தற்போது, நாக சைதன்யாவும், சமந்தாவும் ஐதராபாத்தில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இங்குள்ள ஹார்டு ராக் என்ற காபி ஷாப் முன்னாள் சமந்தா, நாக சைதன்யா இருவரும் இரவு நேர ஒளியில் சிரித்து பேசியபடி உள்ளனர். இந்த புகைப்படம் இவர்களின் அனுமதிப் பெற்றே எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. 


முடிவெடுத்த பின்னர் முக்காடு எதற்கு? பெற்றோரே ஒத்துக் கொண்ட பிறகு மற்றவர்களை கண்டு என்ன பயம் என்பதுபோல் இந்த ஜோடி உலா வருகிறது. வாழ்த்துக்கள்.


Find Out More:

Related Articles: