ஜோதிகாவின் அடுத்த படம் தொடங்கியது

Sekar Chandra
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு, அவர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுக்கும்வகையில், '36 வயதினிலே' திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்ததோடு, ஜோதிகாவிற்கு பல விருதுகளையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து ஜோதிகா, 'குற்றம் கடிதல்' திரைப்பட இயக்குனர் பிரம்மா இயக்கவுள்ள புது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த படப்பிடிப்பில் நடிப்பதற்கு முன்பு, இன்றிலிருந்து ஜோதிகா இந்த படத்தில் நடிப்பதற்காக முன்பயிற்சி எடுத்து வருகிறார்.

இயக்குனர் பிரம்மா


இந்த மாத இறுதிவரை அவர் இந்த பயிற்சி எடுப்பார் என கூறப்படுகிறது. மேலும் பெண் சார்ந்த கதையை கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தை சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' சார்பில் தயாரிக்கவுள்ளார்



Find Out More:

Related Articles: