ஒரு நேரத்தில் ஒன்று போதும்... சுந்தர்.சி.க்கு நோ சொல்லிட்டார்...

Sekar Chandra
சென்னை:
சுந்தர்.சிக்கு நோ சொல்லிவிட்டாராம்... நோ சொல்லிவிட்டாராம்... என்பதுதான் லேட்டஸ்ட் டாக்காக உள்ளது.


மினிமம் பட்ஜெட்டில் படம் எடுத்து கல்லா கட்டி வந்த சுந்தர்.சி. இப்போ மிக பிரமாண்டமாக 350 கோடி ரூபாயில் படம் எடுக்க போகிறார் என்பது தெரிந்த செய்திதான். இதில் தமிழில் விஜய்யும், தெலுங்கு பதிப்பில் மகேஷ்பாபுவையும் நடிக்க வைக்க பேச்சுக்கள் நடந்தன.


இந்நிலையில் வேண்டாம்... வேண்டாம்... ஒருநேரத்தில் ஒரு படம் மட்டும் போதும்ன்னு மகேஷ்பாபு சுந்தர்.சி. படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம். ஏன் என்றால் இவரோட பிரமோற்சவம் படம் பிரமாண்டமாக தயாராகி பிளாப் ஆனதுதான். ஒரு நேரத்தில் ஒரு படத்தில் கவனம் செலுத்தினால் போதும். இப்போ... முருகதாஸ் படமே போதும் என்று முடிவு செய்துட்டாராம்.


அப்ப வேறு ஒரு ஹீரோவை செலக்ட் செய்ய ரொம்ப முனைப்பு காட்டி வருகிறாராம் சுந்தர்.சி. என்னங்க இப்படி ஆயிடுச்சே...


Find Out More:

Related Articles: