நடித்தால் ஹீரோ தான்

Sekar Chandra
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படி தான்' போன்ற சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்த படங்கள் ஊற்றிக் கொண்டன. ஆனாலும் நடித்தால் ஹீரோ தான் என பிடிவாதத்துடனும், உறுதியுடனும் இருக்கிறார் சந்தானம்.


இதற்கு இடையில் ரசிகர் மன்றங்கள் இருந்தால் தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வர முடியும் என யாரோ அவருக்கு அட்வைஸ் கூறவே அதற்கான வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.


சென்னை உட்பட தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் எல்லாம் சந்தானம் ரசிகர் மன்றம் என்ற போர்டுகள் முளைத்துள்ளன. இதற்கான செலவையும் அவரே ஏற்கிறாராம். எதிர்காலத்தில் அரசியலையும் ஒரு கை பார்க்காமல் விட மாட்டார் போலிருக்கிறது என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.


Find Out More:

Related Articles: