தங்கைக்காக கதை களத்தில் புகுந்த அக்கா

Sekar Chandra
சென்னை:
அக்கா உடையாள் படத்துக்கு அஞ்சாள் என்று புது மொழியே சொல்லலாம் போல் இவர்களை பார்த்து என்கின்றனர்  கோலிவுட் கோவிந்துக்கள். யாரை பார்த்து தெரியுங்களா?


"தல" மனைவி ஷாலினி தன் தங்கை ஷாமிலிக்காக கதை கேட்கும்இ படலத்தில் இறங்கியுள்ளார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி.


‘அமர்க்களம்’ படத்தின் போது அஜித்தை காதலித்து திருமணம் செய்த பின்னர் நடிப்பிற்கு ஒரு முழுக்கு  போட்டு குடும்ப வாழ்க்கையில் புகுந்த பின்னர் அவர் திரையுலகம் பக்கமே திரும்பி பார்க்கவில்லை. இப்போது தன் தங்கைக்காக அவர் களம் திரும்பி உள்ளார். எப்படி தெரியுங்களா?


இவரது தங்கை ஷாமிலி கதாநாயகியாக விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘வீரசிவாஜி’ படம் முடிந்துள்ளது.  தொடர்ந்த ஷாமிலியிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் யார் தெரியுங்களா கதை கேட்கிறார்கள்? 


அவரது அக்கா ஷாலினிதான். 3 இயக்குனர்களிடம் ஷாலினி கதை கேட்டு இருக்கிறாராம். இதில் யார் சொன்ன கதையை தேர்ந்தெடுப்பார் என்பது விரைவில் தெரிய வரும். தன் தங்கையில் சிறந்த நடிகையாக மாற்றியே தீரவேண்டும் என்று கதை கேட்பு படலத்தில் தானே பங்கெடுத்துள்ளாராம்... இப்ப தெரியுதுங்களா? அக்கா இருந்தா தங்கைக்கு பயமே வேண்டாம்னு.



Find Out More:

Related Articles: