நான்தாங்க அவரு ஹீரோ ஆக நான்தான் காரணம்... சதீஷ் "லகலக"

Sekar Chandra
சென்னை:
நான்தாங்க காரணம்... அவர் ஹீரோவாக மாற நான்தான் காரணம் என்று "ரெமோ" விழாவில் செம கலாய்ப்பு செய்துள்ளார் இவர். யார் தெரியுங்களா?


அது வேறு யாருமில்லை காமெடி நடிகர் சதீஷ் தான். சிவகார்த்திகேயனின் நண்பருமான இவர் ரெமோ  விழாவில் பேசும்போது, "சிவகார்த்திகேயன் ஹீரோ ஆவதற்கு நான்தாங்க காரணம். 2 பேரும் குறும்படங்களில் நடிச்சோம். அப்ப


நான் ஒரு பெரிய காமெடியன் ஆக வேண்டும் என்று அவரு சொல்லிக்கிட்டே இருப்பாரு. நான்தான் 'நீ ஒரு ஹீரோ மெட்டீரியல்' என்று சொல்லி... சொல்லி... அதை அவர் மனதில் பதிய வைச்சு ஹீரோ ஆக்கிவிட்டேன்." என்றாரே பாருங்க... அதுக்கு அப்புறம் அவர் சொன்னதுதான் செம ஹைலைட். என்னதெரியுங்களா?


"அவரை அப்படி உசுப்பேற்றி விட்டதால்தான் அவர் ஹீரோ ஆனார். அதனால் அவர் நண்பன் நான் காமெடியன் ஆக முடிந்தது" என்றாரே பாருங்க.... பங்கஷனில் பங்கேற்றவர் மனம் விட்டு ரசித்து சிரித்தனர்.


Find Out More:

Related Articles: