அடுத்தடுத்த நிலநடுக்கம்... அந்தமான் தீவு மக்கள் அச்சம்

Sekar Tamil
போர்ட் பிளேர்:


அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் அந்தமான் தீவை சேர்ந்த மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அதிகாலையிலேயே அவர்கள் இந்த அச்சத்திற்கு உள்ளானார்கள்.


அந்தமான் தீவில் முதல் நிலநடுக்கம் அதிகாலை 2.30 மணிக்கு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. அசந்து உறங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தால் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.


பின்னர் நிலைமை சகஜநிலைக்கு திரும்பியதும் மக்கள் சற்றே ஆசுவாசம் அடைந்தனர். இருப்பினும் மீண்டும் காலை 8.30 மணிக்கு மீண்டும் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.


இருப்பினும் மக்கள் அச்சத்துடன்தான் உள்ளனர்.


Find Out More:

Related Articles: