5 கிலோ எடை குழந்தை... சுகப்பிரசவம்... டாக்டர்கள் சாதனை

Sekar Tamil
சென்னை:
அரசு டாக்டர்களின் சாதனைதான் தற்போது சென்னையின் டாக் ஆப் த சிட்டியாக உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?


சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு 5 கிலோ எடை கொண்ட குழந்தையை சுகப்பிரசவம் மூலம் பிரசவித்து அரசு டாக்டர்கள் செய்த சாதனைதான்.


 சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் கல்பனா. இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக சென்னை அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவரை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் தாயின் வயிற்றில் இருந்த குழந்தை, சராசரி எடையைவிடவும் அதிக எடை கொண்டதாக இருந்ததுதான். 


இதை அடுத்து கல்பனாவை தங்களின் சிறப்பு கண்காணிப்புக்கு கொண்டு வந்த டாக்டர்கள்... 5 கிலோ எடை கொண்ட பெண் குழந்தையை சுகப்பிரசவத்தில் பிறக்க செய்து சாதனை படைத்துள்ளனர்.


 இதுபோன்ற நேரங்களில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதால், சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதுதான் உண்மை. ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற செய்த டாக்டர்களின் சாதனைதான் சென்னை மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. 


Find Out More:

Related Articles: