முடி வளர்ச்சியை தூண்ட செய்யும் குறிப்புகள்

Sekar Tamil
இன்றைக்கு பெரும்பாலானோர் தலை முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். தலைமுடி உதிர்வது, இளம் வயதிலே வழுக்கை ஏற்படுவது, நரை முடி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். 


இதை இயற்கை மருத்துவ முறையிலே சரி செய்யலாம். இப்போது அதற்கான குறிப்பு முறைகளை நாம் பார்ப்போம்.


தேவையான பொருட்கள் : 
தைம் ஆயில்
வெந்தயம் - 4 ஸ்பூன்
செம்பருத்தி பூ - 6


தைம் ஆயில் கடைகளில் கிடைக்கும். இதை தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரம் முன்பு, நன்கு தலையில் அப்பளை செய்ய வேண்டும். பிறகு ஊறவைத்து, அரைத்த வெந்தயம் மற்றும் செம்பருத்தி பூ பேஸ்டை தலையில் தடவி கொள்ள வேண்டும். 


நன்கு ஊறியதும், 1 மணி நேரம் கழித்து தலையை அலசி கழுவ வேண்டும். இதை வாரம் ஒருமுறை வைத்து, தொடர்ந்து பின்பற்றி வந்தால், தலை முடி சம்மந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். 


Find Out More:

Related Articles: