இளமையான முகம் பெற பாதாம் பேசியல்....

Sekar Tamil
எல்லா வயதிலும் சருமம் ஒரே மாதிரி இருப்பவை அல்ல. சிலர் இளம் வயதிலியே வயதான தோற்றத்தில் உள்ளனர். நம் சருமத்தை எப்போதும் ஒரே மாதிரி இருக்க வைப்பதற்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை, பேசியல் செய்து வரலாம்.


இளமையான சருமத்தை பெற பாதாம் பேசியல் செய்வது மிகவும் நல்லது. இதன் செய்முறையை இப்போது நாம் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :
பாதாம் - 5 
பால் - 1 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் 
கடலை மாவு - 2 ஸ்பூன்


பாதாமை நன்கு ஊற வைத்து, மிக்சியில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் கடலை மாவு, பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் 10 நிமிடம் நன்கு பூசி மசாஜ் செய்யுங்கள். பின்பு நன்கு உலர்ந்ததும், அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.


இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், முகம் இளமையுடன், பளிச்சென்று இருக்கும்.


Find Out More:

Related Articles: