முகத்தை பராமரிக்க இயற்கை வழிமுறைகள்

Sekar Tamil
முகத்தில் பருக்கள், தேவையற்ற முடிகள், சுருக்கங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள டிப்ஸினை பின்பற்றலாம்.


முகத்தில் தேவையற்ற முடி இருந்தால், கடலை மாவுடன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பின்பற்றி வந்தால், முகத்தில் உள்ள முடிகள் மறையும்.


முகச்சுருக்கம் உள்ளவர்கள், தேங்காய் எண்ணையுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து பூசி வந்தால், முக சுருக்கங்கள் நீங்கும். 


தினமும் இரவு படுக்கும் முன்பு, இரண்டு தேக்கரண்டி புதினா சாறு, பாதி எலுமிச்சையின் சாறு, 2 தேக்கரண்டி பயத்த மாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி வந்தால், கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கும்.


தக்காளி சாற்றை முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளக்கும்.


Find Out More:

Related Articles: